Movie: Pattinathar
Cast: M.M.Dandapani Desikar, D.R.Muthulakshmi, V. N.Sundaram, T.K.Rukmini
Music by: Gopal Sharma & Papanasam Sivan (few songs)
Director(s): T.C.Vadivelu Nayakar
Producer(s): M.T.Rajan
Released on: 1936
Oru Mada Maadhum Oruvanumagi (with lyrics) | Download
பட்டினத்தார் பாடல்
ஒரு மடமாதும் ஒருவனுமாகி
இன்பசுகம் தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து
பனியிலோர் பாதி சிறுதுளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதும அரும்பு கமடம் இதென்று
பார்வை மெய்வாய்செவி கால்கைகள் என்ற
உருவமும் ஆகி உயிர்வளர் மாதம்
ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை
உதரமகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து
ஒளிநகை ஊறல் இதழ் மடவாரும்
உவந்து முகந்திட வந்து தவழ்ந்து
மடியில் இருந்து மழலை மொழிந்து
வா இரு போவென நாமம் விளம்ப
உடைமணி ஆடை அரைவடம் ஆட
உண்பவர் தின்பவர் தங்களோடுண்டு
தெருவிலிருந்து புழுதி அளைந்து
தேடிய பாலரோடோடி நடந்து
அஞ்சு வயதாகி விளையாடியே
உயர்தரு ஞான குரு உபதேசம்
முத்தமிழின் கலையும் கரை கண்டு
வளர்பிறை என்று பலரும் விளம்ப
வாழ்பதினாறு பிராயமும் வந்து
மதனசொரூபன் இவனென மோக
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழி கொண்டு சுழிய எறிந்து
மாமயில் போலவர் போவது கண்டு
மனது பொறாமல் அவர் பிறகோடி
தேடிய மாமுதல் சேர வழங்கி
வளமையும் மாறி இளமையும் மாறி
வன்பல் விழுந்திரு கண்கள் இருண்டு
வயது முதிர்ந்து நரைதிரை வந்து
வாத விரோத குரோதமடைந்து
செங்கையில் ஓர் தடியும் ஆகியே
வருவது போவது ஒருமுது கூனும்
மந்தி யெனும்படி குந்தி நடந்து
மதியும் அழிந்து செவிதிமிர் வந்து
வாயறியாமல் விடாமல் மொழிந்து
கலகலவென்று மலசலம் வந்து
கால்வழி மேல்வழி சார நடந்து
கடன்முறை பேசும் எனவுரை நாவும்
உறங்கி விழுந்து கைகொண்டு மொழிந்து
கடைவழி கஞ்சி ஒழுகிட வந்து
பூதமும் நாலு சுவாசமும் நின்று
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே
வளைபிறை போல எயிரும் உரோமமும்
சடையும் சிறு குஞ்சியும் விஞ்ச
மனதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போல் யமதூதர்கள் வந்து
வலைகொடு வீசி உயிர்கொடு போக
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து
மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கினரே இவர் காலமறிந்து
வரிசை கெடாமல் எடுமென ஓடி
வந்திள மைந்தர் குனிந்து சுமந்து
கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து
விறகிட மூடி அழல்கொடு போட
வெந்து விழுந்து முறிந்திநிணங்கள்
உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே!
..............................
#KingMartine
No comments:
Post a Comment